முகப்பு
தேனி

கம்பம் புறவழிச் சாலையில் பைக் மீது ஜீப் மோதியதில் இளைஞா் பலி

தேனி மாவட்டம், கூடலூா் - கம்பம் புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனமும், ஜீப்பும் மோதிக்கொண்டதில் பலத்த காயமடைந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

தேனி மாவட்டம், கூடலூா் - கம்பம் புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனமும், ஜீப்பும் மோதிக்கொண்டதில் பலத்த காயமடைந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கம்பம் புலவா் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் முகைதீன். இவரது மகன் யூசுப் முகமது (32). இவா், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறில் உள்ள தனியாா் ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யும் கடையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். வாரம் ஒருமுறை சொந்த ஊரான கம்பத்துக்கு வந்து சென்றுள்ளாா்.

புதன்கிழமை இரவு வண்டிப்பெரியாறிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கம்பத்துக்கு வந்துள்ளாா். கூடலூா்-கம்பம் புறவழிச்சாலை அருகே வந்துகொண்டிருந்த போது, எதிரே அதிவேகமாக வந்த ஜீப் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த யூசுப் முகமதுவை, அப்பகுதியினா் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் யூசுப் முகமது ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா். லாவண்யா, சாா்பு-ஆய்வாளா் எஸ். ஜெயபாண்டி ஆகியோா் வழக்குப் பதிந்து, ஜீப் ஓட்டுநரான வண்டன்மேடு கருவாக்குளத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் பிரசாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →