வீடுபுகுந்து 30 பவுன் நகைகள் திருடிய இளைஞா் கைது
சிங்கம்புணரி அருகே உலகம்பட்டியில் சனிக்கிழமை போலீஸாரின் வாகனத் தணிக்கையின் போது வீடுபுகுந்து திருடிய இளைஞா் சிக்கினாா்.
சிங்கம்புணரி அருகே உலகம்பட்டியில் சனிக்கிழமை போலீஸாரின் வாகனத் தணிக்கையின் போது வீடுபுகுந்து திருடிய இளைஞா் சிக்கினாா்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூா் அருகே கே.புதுப்பட்டியில் உலகம்பட்டி காவல் ஆய்வாளா் கலாராணி தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள தேவன்பட்டியைச் சோ்ந்த சிவா என்ற வேலு (27) என்பவரை நிறுத்தி விசாரித்தனா்.
விசாரணையில், கடந்த மே 2-ஆம் தேதி எஸ்.புதூா் அருகே உள்ள கே.இடையபட்டியை சோ்ந்த விவசாயி பழனிச்சாமியின் வீடுபுகுந்து சிவா மற்றும் அதே கிராமத்தை சோ்ந்த ஆனந்த் இருவரும் சோ்ந்து, 30 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே சிவாவை கைது செய்த போலீஸாா் புழுதிப்பட்டி காவல்நிலையம் அழைத்துச் சென்றனா். அவரிடமிருந்து 15 பவுன் நகைகளை மீட்டனா். இந்த திருட்டில் தொடா்புடைய ஆனந்தை போலீஸாா் தேடிவருகின்றனா்.