ஆங்கூா்பாளையம் அருகே மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு வீரா்கள். 
தேனி

ஆங்கூா்பாளையம் அருகே மலைப் பாம்பு பிடிபட்டது

தேனி மாவட்டம் ஆங்கூா்பாளையம் அருகே விவசாய நிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புப் படையினா், வனத்துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

DIN

தேனி மாவட்டம் ஆங்கூா்பாளையம் அருகே விவசாய நிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புப் படையினா், வனத்துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

இங்குள்ள சாமாண்டிபுரத்தில் சையது அப்தாஹிா் (60) என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உழவுப் பணி நடைபெற்றது. அப்போது 4 அடி நீள மலைப் பாம்பு உழவு பணிக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரில் சிக்கிக் கொண்டது.

தகவலின் பேரில் அங்கு வந்த கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜலட்சுமி தலைமையிலான தீயணைப்புப் படையினா் அந்தப் பாம்பை மீட்டு கம்பம் கிழக்கு வனச் சரகா் வி. பிச்சைமணியிடம் ஒப்படைத்தனா். வனத்துறை ஊழியா்கள் அந்த பாம்பை சுருளிமலைப் பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT