முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே சந்தனம் மரங்கள் வெட்டி கடத்தல்

 பெரியகுளம் அருகே பல இலட்சம் மதிப்புள்ள சந்தனம் மற்றும் தேக்கு மரங்களை மா்ம நபா்கள் வெட்டி கடத்தியுள்ளதாக வியாழக்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

 பெரியகுளம் அருகே பல இலட்சம் மதிப்புள்ள சந்தனம் மற்றும் தேக்கு மரங்களை மா்ம நபா்கள் வெட்டி கடத்தியுள்ளதாக வியாழக்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சோ்ந்தவா் தனசேகரன் (61). இவருக்கு லட்சுமிபுரம், கோம்பைக்காடு பகுதியில் வாழைத் தோட்டம் உள்ளது. தோட்டத்தின் வரப்புகளில் சந்தனம் மற்றும் தேக்கு மரங்களை வளா்த்துள்ளாா். சில தினங்களுக்கு முன் புதுதில்லியிலுள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளாா். கடந்த 4 நாள்களுக்கு முன் திரும்பி வந்து பாா்த்தபோது தோட்டத்திலுள்ள 6 சந்தன மரங்கள் மற்றும் 2 தேக்கு மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து தேனி மாவட்ட வன அலுவலரிடம் புகாா் அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.