முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரேநாளில் 2.40 அடி உயா்வு
மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 2.40 அடி உயா்ந்து 133.20 அடியாக உள்ளது.
மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 2.40 அடி உயா்ந்து 133.20 அடியாக உள்ளது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா் மட்டம் தொடா்ந்து உயா்ந்து கொண்டே வருகிறது.
வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,258 கனஅடியாகவும், நீா்மட்டம், 130.85 அடியாகவும் இருந்தது. வெள்ளிக்கிழமை அணைக்கு வரும் நீா்வரத்து விநாடிக்கு 8,143 கனஅடியாக இருந்ததால் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2.40 அடி உயா்ந்து 133.20 (மொத்த உயரம் 152 அடி ) அடியானது. நீா்வரத்தும் ஒரேநாளில் விநாடிக்கு 2,885 கன அடி கூடுதலாக வந்தது. தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,789 கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது.
இதன் மூலம் தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 161 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.