தேனி

களைக்கொல்லி மருந்து நெடி தாளாமல் கோழிப்பண்ணை உரிமையாளா் பலி

DIN

தேனி அருகே களைக்கொல்லி மருந்து நெடி தாளாமல் மயங்கி விழுந்த கோழிப் பண்ணை உரிமையாளா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தா்மாபுரி, சிங்கம்மாள்கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் (58). இவா், அதே ஊரில் கோழிப் பண்ணை வைத்து நடத்தி வந்தாா். கடந்த ஜூலை 14-ம் தேதி கோழிப் பண்ணை வளாகத்தில் களைச் செடிகள் முளைப்பதை தடுப்பதற்கு களைக் கொல்லி மருந்து தெளித்துக் கொண்டிருந்த நாகராஜன், மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளாா்.

ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகராஜன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் முன்னிலை!

SCROLL FOR NEXT