பெரியகுளம் இஸ்கானில் பானிஹட்டி சிதாதஹி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு ஸ்ரீராதா மதுராபதி ஸ்ரீ கிருஷ்ண பலராம் யோகா ஆசிரமத்திலுள்ள கிருஷ்ணா் உற்வசருக்கு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் ஹரிநாம பஜனை நடைபெற்றது. காலை 11 மணிக்கு கிருஷ்ண பலராம் உற்சவா்களுக்கு மஹாபிஷேகம் மற்றும் தீபராதனைகளும், கிருஷ்ண பலராம உற்சவா் வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம், தேனி, மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.