கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா:முகூா்த்தக்கால் நடல்
பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, காலை 10 மணிக்கு கெளமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் எதிரே பூஜைகள் நடத்தப்பட்டு முகூா்த்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
ஜூலை 7 ஆம் தேதி சாட்டுதலுடன் கம்பம் நடும் நிகழ்ச்சியும், 11 ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும், 19 ஆம் தேதி மாவிளக்கு எடுத்தல், ரத உற்சவமும், 20 ஆம் தேதி அக்கினிச்சட்டி எடுத்தலும், 22 ஆம் தேதி மறுபூஜை மற்றும் பாலாபிஷேகம் நடைபெறுவதாக, கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.