தேனி

அணிவகுப்பில் மயங்கிய மாணவி உயிரிழப்பு: கல்லூரியை உறவினா்கள் முற்றுகை

DIN

பெரியகுளத்தில் பெண்கள் கல்லூரியில் அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு உறவினா்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில், கல்லூரி விளையாட்டு நாள் சனிக்கிழமை நடைபெற இருந்தது. போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கான ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லுப்பட்டியை சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவி ஜெனிலியா பங்கேற்றாா். அணிவகுப்பின் போது மாணவி ஜெனிலியா திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டாா். உடனே அவரை மீட்டு பெரியகுளத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாணவி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

மாணவியின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை இரவு கல்லூரியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT