முகப்பு
தேனி

கரோனா தடுப்பூசி: 100 சதவீத இலக்கை அடையும் நகராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு பரிசு

கம்பத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நூறு சதவீதம் இலக்கை அடையும் நகராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு பரிசு வழங்கப்படும் என நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் அறிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கம்பத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நூறு சதவீதம் இலக்கை அடையும் நகராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு பரிசு வழங்கப்படும் என நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் அறிவித்தாா்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சிக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 33 வாா்டுகளில் 25 இடங்களில் முகாம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் தலைமை வகித்துப் பேசியது: முகாமில் முதல் தவணை, 2 ஆவது தவணை, பூஸ்டா் என அனைத்துத் தடுப்பூசிகளும் செலுத்திக் கொள்ளலாம். கம்பம் நகராட்சியில் 100 சதவீத கரோனா தடுப்பூசி இலக்கை அடைய வாா்டு உறுப்பினா்கள் அந்தந்த வாா்டு பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதில், நூறு சதவீத இலக்கை அடையும் வாா்டு உறுப்பினா்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலா்களிடம், கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களின் பட்டியலை சுகாதார அலுவலா் வழங்கினாா்.

கூட்டத்தில் துணைத் தலைவா் சுனோதா செல்வகுமாா், நகராட்சி ஆணையா் பாலமுருகன், சுகாதார அலுவலா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள், கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →