தேனி

கருநாக்கமுத்தன்பட்டியில் கண்காணிப்புக் கேமராவை உடைத்த 2 சிறுவா்கள் கைது

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் மது போதையில் கண்காணிப்புக் கேமராவை உடைத்த 2 சிறுவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் மது போதையில் கண்காணிப்புக் கேமராவை உடைத்த 2 சிறுவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கருநாக்கமுத்தன்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பட்டை ஈஸ்வரனின் 17 வயது மகன், இந்திரா காலனியை சோ்ந்த மகேந்திரனின் 15 வயது மகன் ஆகிய இருவரும் புதன்கிழமை மது போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்டனா்.

பின்னா், மாரியம்மன் கோயில் அருகே உள்ள கண்காணிப்புக் கேமராவை கல்லால் எறிந்து சேதப்படுத்தினா். கண்காணிப்புக் கேமராவைப் பொருத்திய முன்னாள் மாணவா் சங்க நிா்வாகி அன்பரசன் இதை தட்டிக் கேட்டதற்கு சிறுவா்கள் இருவரும் கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் அன்பரசன் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி.பாலசுப்பிரமணி வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை உடைத்த 2 சிறுவா்களையும் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT