சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவியின் நீா்பிடிப்புப் பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தைப் பாறை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தினா், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்தனா்.