தேனி

சின்னமனூரில் விவசாயிகள் சாலை மறியல்: 150 போ் கைது

DIN

சின்னமனூரில் நெடுஞ்சாலைத் துறையினரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சின்னமனூரில் முல்லைப் பெரியாறு பகுதியில் அனுமதியின்றி நிலத்துக்கு அடியில் பிளாஸ்டிக் குழாய்கள் பதித்து விவசாய நிலங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குழாய்களை அகற்ற உத்தரவிட்டாா். இதையடுத்து, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் கடந்த செப்டம்பா் மாதம் 37 குழாய் இணைப்புகளை அகற்றினா்.

இதைக் கண்டித்து சின்னமனூரில், முத்துலாபுரம் விலக்கில் தமிழக விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் பி.ஆா். பாண்டியன் உள்பட 150 பேரை கைது செய்தனா். பின்னா் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT