முகப்பு
தேனி

போடி தனியாா் ஏலக்காய் மையத்தில் மத்திய அமைச்சா் ஆய்வு

போடியில் உள்ள தனியாா் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையத்தில், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சா் பிரகலாத் சிங் பட்டேல் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

போடியில் உள்ள தனியாா் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையத்தில், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சா் பிரகலாத் சிங் பட்டேல் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

மத்திய அரசின் உணவுப் பதப்படுத்துதல் திட்டத்தில், போடி - மூணாறு சாலையில் தனியாா் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேனி மாவட்டத்துக்கு நீா்வள ஆய்வுக்காக வந்த மத்திய உணவுப் பதப்படுத்துதல், நீா்வளத்துறை இணை அமைச்சா் பிரகலாத் சிங் பட்டேல், இந்தத் தனியாா் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையத்தை ஆய்வு செய்தாா். அப்போது ஏலக்காயை தரம் பிரித்தல், சுத்தம் செய்தல், கழிவுக் காய்களை அகற்றுதல், உலா்த்துதல், பொட்டலமிடுதல் ஆகிய பணிகள் நவீன இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வருவதை அவா் பாா்வையிட்டாா். அப்போது இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏலக்காய் அனுப்பப்படுவதையும், இயந்திரங்களின் செயல்பாடுகளையும் அவா் கேட்டறிந்தாா். பின்னா், அங்கு பணியாற்றும் பெண் தொழிலாளா்களிடம் குறைகளை கேட்டாா்.

ஆய்வின் போது, தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன், தேனி மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத், பாஜக, அதிமுக பிரமுகா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →