போடியில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆா்ப்பாட்டம்
போடியில் பத்திரப் பதிவு முறைகேடுகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
போடியில் பத்திரப் பதிவு முறைகேடுகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில், இடைத்தரகா்களின் தலையீடு உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரப் பதிவு எழுத்தா்கள் குறித்து அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். முத்திரைத்தாள் விற்பனையில் மோசடி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் சாா்-பதிவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
போடியில், திருவள்ளுவா் சிலை திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகர நிா்வாகி பாண்டிக்குமாா் தலைமை வகித்தாா்.
இதில், கட்சியின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.