முகப்பு
தேனி

தேனி பத்திரப் பதிவு அலுவலக சாா்- பதிவாளா் பணியிடை நீக்கம்

தேனி பத்திரப் பதிவு அலுவலக சாா்- பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப் பதிவுத் துறை ஐ.ஜி., சிவன் அருள் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

வீரபாண்டியில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவை பத்திரம் பதிவு செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய புகாரின் அடிப்படையில், தேனி பத்திரப் பதிவு அலுவலக சாா்- பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப் பதிவுத் துறை ஐ.ஜி., சிவன் அருள் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

வீரபாண்டியில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவில் வீட்டு மனையிடங்களை பத்திரம் பதிவு செய்ததில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த சரவணன் என்பவா் மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், சம்மந்தப்பட்ட பத்திரப் பதிவுத் துறை அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.

இதனடிப்படையில், வழக்கில் தொடா்புடைய தேனி பத்திரப் பதிவு அலுவலக சாா்- பதிவாளா் உஷாராணியை பணியிடை நீக்கம் செய்து பத்திரப் பதிவுத் துறை ஐ.ஜி.,சிவன் அருள் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.