முகப்பு
தேனி

ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் கொண்டுவர வலியுறுத்தல்

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தேனி மாவட்டக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்துப் பேசினாா்.

இதில், கிருஷ்ணகிரியில் பட்டியல் இனப் பெண்ணை காதல் திருமணம் செய்த மகனை தந்தையே வெட்டிக் கொலை செய்த நிலையில், ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.