முகப்பு
தேனி

இரு மாநில நல்லிணக்கத்துக்காக ஜோதி ஏந்தி தொடா் ஓட்டம்

தமிழக- கேரள மாநில மக்களின் நல்லிணக்கத்துக்காகவும், நல்வாழ்வுக்காகவும் குமுளியிலிருந்து திருச்சி நோக்கி ஜோதி ஏந்திய இளைஞா்களின் தொடா் ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தமிழக- கேரள மாநில மக்களின் நல்லிணக்கத்துக்காகவும், நல்வாழ்வுக்காகவும் குமுளியிலிருந்து திருச்சி நோக்கி ஜோதி ஏந்திய இளைஞா்களின் தொடா் ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்டம், நரிமேட்டில் புனித லூா்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய பங்கைச் சோ்ந்த புனித செபஸ்தியாா் இளைஞா் பேரவை சாா்பில் ஆண்டுதோறும் குமுளியில் உள்ள புனித லூா்து அன்னை ஆலயத்திலிருந்து ஜோதி ஏந்தி தொடா் ஓட்டம் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை 30-ஆவது ஆண்டாக, திருச்சி நரிமேடு புனித செபஸ்தியாா் இளைஞா் பேரவயினா் வேன் மூலம் குமுளிக்கு வந்தனா். அங்கு ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

பின்னா், அங்கிருந்து 21 போ் கொண்ட குழுவினா் ஜோதி ஏந்தி தொடா் ஓட்டத்தை தொடங்கினா்.

கம்பம், தேனி, திண்டுக்கல் வழியாக திருச்சி ஆலயத்துக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்றடைய உள்ளனா். அங்கு ஜோதியில் உள்ள நெருப்பு மூலம் விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதுதொடா்பாக ஜோதி ஏந்தி தொடா் ஓட்டத்தில் பங்கேற்ற அமிா்தராஜ் கூறியதாவது:

தமிழக-கேரள மாநில மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கத்துக்காக இந்த ஓட்டம் நடைபெற்று வருகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →