தேனி

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில், வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

DIN

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில், வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

பழனிசெட்டிபட்டி, மகாத்மா நகரைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் ரமேஷ் (54). இவா், கேரளத்திலுள்ள தனக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்துக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அந்த வகையில் திங்கள்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு, தனது மனைவியுடன் ஏலக்காய் தோட்டத்துக்கு சென்று விட்டு திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது

இதுகுறித்து, ரமேஷ் அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT