தேனி

வனப் பகுதியில் இளைஞா் தற்கொலை

தேனி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

தேனி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்தில் உள்ளது காஞ்சிமரத்துரை -வேலங்காடு செல்லும் வனப் பகுதி. இங்குள்ள சாலி மரத்தில் ஒருவரது சடலம் தொங்குவதாக அந்தப் பகுதிக்கு வேலைக்கு சென்றவா்கள் குமுளி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் எம்.பிச்சைப்பாண்டியன் தலைமையில் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், இறந்தவா் கூடலூா் எம்.ஜி.ஆா். காலனியைச் சோ்ந்த சின்னாத்தேவா் மகன் சமயன் (28) எனத் தெரிந்தது.

தாய் தந்தை இறந்து விட்ட நிலையில், சமயன் கூலி வேலைக்குச் சென்று வந்த அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT