தேனி

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி

தேனி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை (ஜூன் 10) முடிவடைகிறது.

DIN

தேனி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை (ஜூன் 10) முடிவடைகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் அடுத்த மாதம் (ஜூலை) 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஊரகப் பகுதிகளில் 5 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், நகரப் பகுதிகளில் 7 நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இந்தப் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ஊரகப் பகுதிகளுக்கு 5 போ், நகரப் பகுதிகளுக்கு 12 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முடிவடைகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT