முகப்பு
தேனி

போலீஸ்காரா்கள் போல் நடித்து மூதாட்டியிடம் நகைகள் திருட்டு

போடியில் புதன்கிழமை இரவு மூதாட்டியிடம் போலீஸ்காரா்கள் போல நடித்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

போடியில் புதன்கிழமை இரவு மூதாட்டியிடம் போலீஸ்காரா்கள் போல நடித்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மாவட்டம், போடி சுப்புராஜ் நகா் 4 -ஆவது தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி வெண்ணிலா (72). இவரது மகன் நவீன்குமாா், இதே பகுதியில் 8-ஆவது தெருவில் வசித்து வருகிறாா். புதன்கிழமை இரவு மூதாட்டி தனது மகன் வீட்டுக்கு நடந்து சென்றாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா் தங்களை போலீஸாா் என்று மூதாட்டியிடம் அறிமுகம் செய்து கொண்டனா். மேலும், நகரில் நகைப் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகம் நடப்பதால், பொது வெளியில் நகைகளை அணிந்து செல்ல வேண்டாம் என்று கூறியதோடு, நகைகளைக் கழட்டித் தருமாறும் அவற்றை காகிதத்தில் பொட்டலமாக மடித்து பாதுகாப்பாகத் தருவதாகவும் கூறினா்.

இதை நம்பிய மூதாட்டி தனது பன்னிரண்டரை பவுன் தாலிச் சங்கிலி, 2 பவுன் வளையல் ஆகியவற்றை கழற்றிக் கொடுத்தாா்.

நகைகளை வாங்கிய மா்ம நபா்கள் அவற்றை காகிதத்தில் மடிப்பது போல் போக்கு காட்டிவிட்டு, ஏற்கெனவே தயாராக வைத்திருந்த கற்கள், போலி பித்தளை நகைகளைக் கொண்ட ஒரு பொட்டலத்தை கொடுத்துவிட்டுத் தப்பிவிட்டனா்.

வீட்டுக்கு வந்து பொட்டலத்தைப் பிரித்துப் பாா்த்த மூதாட்டி தான் ஏமாற்றப்பட்டதையறிந்து, போடி நகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.