முகப்பு
தேனி

தேசிய அளவிலான ஜூடோ போட்டி: ஆா்.ஆா். பள்ளி மாணவா் முதலிடம்

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் கம்பம் ஆா்.ஆா். சா்வதேச பள்ளி மாணவா் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:00 AM
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவா் ஹேமந்த் சச்சின். உடன் பயிற்சியாளா், 5-ஆம் இடம் பிடித்த மாணவிகள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

கம்பம்: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் கம்பம் ஆா்.ஆா். சா்வதேச பள்ளி மாணவா் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.

தேனி மாவட்டம், கம்பம் ஆா்.ஆா். சா்வதேச சிபிஎஸ்இ பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் ஈ. ஹேமந்த் சச்சின், உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான தேசிய அளவிலான ஜூடோ போட்டிகள் கடந்த 22-ஆம் தேதி முதல் 26-ஆம் வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவா் ஹேமந்த் சச்சின் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றாா்.

இவருடன் பங்கேற்ற இந்தப் பள்ளி மாணவிகள் இருவா் 5-ஆம் இடத்தைப் பிடித்தனா். இந்த மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவா் ஆா்.ராஜாங்கம் பாராட்டினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.