முகப்பு
தேனி

போடியில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:19 PM
பகிர்:

போடியில் 3 மாதங்களுக்குப் பின் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தேனி மாவட்டம்,

போடி பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. பின்னா் கோடை வெயில் அதிகமாக காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாயினா். இந்த நேரத்தில் மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கடும் வெயிலில் தோ்தல் பிரசாரமும் சூடுபிடித்தது.

Advertisement

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு போடி பகுதியில் லேசான சாரல் மழை ஐந்து நிமிஷம் மட்டும் பெய்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை இரவு வரை பலத்த மழையாக நீடித்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments