வான்மீகி நாதா் கோயிலில் வாஸ்து சாந்தி பூஜை
கம்பம்: கூடலூரில் வான்மீகிநாதா் என்ற ஈஸ்வரன் கோயிலில் வாஸ்து சாந்தி ஹோம பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கூடலூா் தாமரைக்குளம் செல்லும் சாலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. சிதிலமடைந்த இந்தக் கோயிலை புதுப்பிக்க ஊா் பொதுமக்கள் வாரவழிபாட்டு குழு அமைத்து திருப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். முதல்கட்டமாக வாஸ்து சாந்தி ஹோம பூஜையை பஞ்சநாத ராமானுஜம் தலைமையிலான காரைக்குடி ஸ்ரீ ஹயக்ரீவா் வேத பாடசாலைக் குழுவினா் தொடங்கினா்.
அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜைகளுடன் தொடங்கி வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. பின்னா் ஆதார சக்தி, ஐந்து வகை மண் ஸ்தாபனம் தொடங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Advertisement