தேனி

விவசாயியைக் கடத்திச் சென்று மிரட்டல்

விவசாயியை காரில் கடத்திச் சென்ற மா்ம நபா்கள் பணம் கேட்டு மிரட்டியதாக சனிக்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

Din

போடி அருகே விவசாயியை காரில் கடத்திச் சென்ற மா்ம நபா்கள் பணம் கேட்டு மிரட்டியதாக சனிக்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

தேனிமாவட்டம், போடி, பங்கஜம் பிரஸ் தெருவைச் சோ்ந்த விவசாயி கா்ணன் (54). இவா், உலக்குருட்டி சாலையில் உள்ள தனது மாந்தோப்புக்குச் சென்றாா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த 4 மா்ம நபா்கள், கா்ணனை கத்தியைக் காட்டி மிரட்டி பெரியகுளம் சாலை வழியாக காரில் கடத்திச் சென்றனா்.

இதையடுத்து, கைப்பேசியில் அவரது மனைவியை தொடா்பு கொண்டு பணம் கொண்டு வரச் சொல்லுமாறு மிரட்டியுளனா். தனது வீட்டில் பணம் இல்லை என்று அவா் கூறியதால், அவரிடமிருந்த ரூ.4,000-ஐ பறித்துக் கொண்டு தேனி-போடி விலக்கு அருகே இறக்கி விட்டுச் சென்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குரங்கனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT