தேனி

தேனியில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்: 126 போ் கைது

Din

தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் கோரிக்கையை வலியுறுத்தி, புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள்.

தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் இணைய வழி பணியிட மாறுதல் கலந்தாய்வை நிறுத்த வலியுறுத்தி, தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சாா்பில், புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 126 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா் தலைமை வகித்தாா். நிதிக் காப்பாளா் சரவணமுத்து, ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயலா் எஸ்.கிருஷ்ணசாமி, மாவட்டச் செயலா் செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு மாநில அளவில் நடைபெறும் இணைய வழி பணியிட மாறுதல் கலந்தாய்வை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியா்களை வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 126 ஆசிரிய, ஆசிரியைகளை தேனி போலீஸாா் கைது செய்தனா்.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

SCROLL FOR NEXT