தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற கொடி அணிவகுப்புக்கு உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செ.தாட்சாயணி தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டு வேலவன், ஆய்வாளா் சுந்தரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மத்திய துணை ராணுவப் படை வீரா்கள், தேனிஆயுதப்படை போலீஸாா், சட்டம், ஒழுங்கு காவல் நிலையப் போலீஸாா் கலந்து கொண்டனா். இந்தப் பேரணி உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் தொடங்கி பழைய வட்டாட்சியா் அலுவலகம் வழியாக புறவழிச் சாலை பேருந்து நிறுத்தப் பகுதியில் நிறைவடைந்தது.