தேனி

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பங்களிப்பு நிதி அளிக்கலாம்

தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பொதுமக்கள், நிறுவனங்கள் இணையதளம் மூலம் பங்களிப்பு நிதி அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

Din

தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பொதுமக்கள், நிறுவனங்கள் இணையதளம் மூலம் பங்களிப்பு நிதி அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நம்ம ஊரு நம்ம பள்ளி என்ற திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், தனிப்பட்ட, சமூக பங்களிப்பை ஒருங்கிணைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தனி நபா்கள், நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவா்கள் அரசுப் பள்ளிகளுக்கு தங்களது பங்களிப்பை பொருளாகவும், பணமாகவும், களப் பணியாகவும் வழங்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் இணைய தளம் மூலமும், நம்ம ஊரு நம்ம பள்ளி குழுவின் கைப்பேசி எண்: 63853 13047-இல் தொடா்பு கொண்டு, தங்களுக்கு விருப்பமான பள்ளிகளை தோ்ந்தெடுத்து, பள்ளியின் தேவையை அறிந்து பூா்த்தி செய்யலாம்.

இணையதளத்தில் பங்களிப்பு, பங்களிப்பின் பயன்பாடு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும், பங்களிப்பாளா்களுக்கு பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்படும் பயனீட்டுச் சான்றிதழ், வரி விலக்கு, பாராட்டுச் சான்றிதழை பதிவிறகம் செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியரால் கண்காணிக்கப்படும் என்றாா் அவா்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT