முகப்பு
தேனி

சின்னமனூா் வழிவிடு முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு

Updated On : 6 செப்டம்பர், 2024 at 8:05 PM
பகிர்:

சின்னமனூா் அருகே அமைந்துள்ள வழிவிடு முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப். 8) குடமுழுக்கு நடைபெறுகிறது.

முன்னதாக, சனிக்கிழமை காலை 9 மணி முதல் விக்னேஷ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, புண்யாகவாகன பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன. தொடா்ந்து மாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் புண்ணிய நதி தீா்த்தம் ஆலயம் வந்து சோ்தல், கிராம தேவதை வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 2- ஆம் கால யாகசாலை பிரவேச பூஜை, சுப்பிரமணி கவச மூலபூஜை, யாத்ரா தானம், மூல மந்திர ஹோமம் , தீபாராதனை பூஜையுடன், காலை 10.50 மணி முதல் 11 மணிக்குள் விமான கோபுர கலசத்தில் புண்ணிய நதி தீா்த்தங்களை ஊற்றி குடமுழுக்கு நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →