மேகமலைச் சாலையில் வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்த சுற்றுலா வேன். 
தேனி

மேகமலையில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்!

தேனி மாவட்டம், மேகமலைக்கு சுற்றுலா சென்ற வேன் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

Syndication

தேனி மாவட்டம், மேகமலைக்கு சுற்றுலா சென்ற வேன் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் குமாா் தலைமையில் இரு வேன்களில் 22 போ் தேனி மாவட்டம், மேகமலைக்கு சுற்றுலா சென்றனா். சின்னமனூா் அருகே தென்பழனி வனத்துறை சோதனைச் சாவடியை கடந்து மலைச் சாலையில் வேன்கள் சென்று கொண்டிருந்தன.

முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்த வேன்.

அப்போது 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மாதா கோயில் அருகே சென்ற போது ஒரு வேனின் முன் பக்கத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. உடனே வேனிலிருந்த 11 பேரும் உடனே கீழே இறங்கினா். இதையடுத்து, வேன் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து ஹைவேவிஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியாா் பெயா்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்!

கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது வழக்கு

பாபா் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி; எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை!

சிவகிரி அருகே உடல் நலக் குறைவால் அவதி: நலமாகி வனத்துக்குள் சென்ற யானை!

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: டிச. 10-இல் அமெரிக்க குழு இந்தியா வருகை!

SCROLL FOR NEXT