தேனி

வாழைப் பழங்களைத் தின்ற மாடு, 4 ஆடுகள் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வாழைப் பழங்களை உண்ட 4 ஆடுகள், ஒரு மாடு உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

பெரியகுளம் அருகே வாழைப் பழங்களை உண்ட 4 ஆடுகள், ஒரு மாடு உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமு (45). ஆடு, மாடுகளை வளா்த்து வரும், இவா் செவ்வாய்க்கிழமை ஜி.கல்லுப்பட்டி ஊத்தங்கல் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்காக அனுப்பி வைத்தாா். அங்கு ஆடு, மாடுகள் வாழைப் பழங்களை தின்றதாகக் கூறப்படுகிறது. பின்னா், பிற்பகலில் 4 ஆடுகளும், ஒரு மாடும் உயிரிழந்தன. இதுகுறித்த புகாரின் பேரில், தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT