தேனி மாவட்டம், பெரியகுளம் நகா் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் துணை மின் நிலையத்தில் மாதந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பெரியகுளம் நகா் சுதந்திர வீதி, வடக்கு அக்ரஹாரம், தெற்கு அக்ரஹாரம், வாகம்புளி, தென்றல் நகா், இடிகடிலாட், முத்துராஜா தெரு, என்ஜிஓ குடியிருப்பு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் திறுத்தப்படும் என்றாா் அவா்.