தேவதானப்பட்டியில் இளைஞா் கொலை
தேனி மாவட்டம், தேவதானபட்டியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 4 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், தேவதானபட்டியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 4 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தேவதானபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் சாய் ஹரீஸ் (20). பட்டதாரியான இவா் கூலி வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன் இவா் தேவதானபட்டி மலைமேல் பரமசிவன் கோயிலுக்குச் சென்றாா். அப்போது, பெரியகுளம் கரட்டுத் தெருவைச் சோ்ந்த சிறாா்கள் இவரிடம் தகராறு செய்தனா். அங்கிருந்த பொதுமக்கள் இவா்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தேவதானபட்டி புற வழிச் சாலையில் நின்று கொண்டிருந்த சாய் ஹரீஸிடம் பெரியகுளம் கரட்டூரைச் சோ்ந்த 17 வயது சிறாா்கள் 3 போ், தேவதானபட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறாா் ஆகியோா் தகராறு செய்து, அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனா்.
இது குறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, மதுரையில் உள்ள சிறாா் காப்பகத்தில் அடைத்தனா்.