தேனி

மளிகைக் கடையில் ரூ. 25 ஆயிரம் திருட்டு

பெரியகுளம் அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம், பொருள்களைத் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

பெரியகுளம் அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம், பொருள்களைத் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எ.வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் வீரபாண்டி (33). இவா், எ.வாடிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றாா்.

மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.25 ஆயிரம், பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினா் தஞ்சாவூருக்கு வருகை!

தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

SCROLL FOR NEXT