தேனி: தேனி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (நவ. 5) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி, வீரபாண்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், தேனி அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைப்புதூா், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரையும், வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.