முகப்பு
தேனி

இளைஞா் தற்கொலை

போடி அருகே வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 14 நவம்பர், 2025 at 6:58 PM
பகிர்:

தேனி மாவட்டம், போடி அருகே வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகேயுள்ள துரைராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவானந்தம் (31). தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்ததால், மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த சிவானந்தம் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →