தேனி

பேருந்து மீது லாரி மோதியதில் பயணி காயம்

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பேருந்தில் சென்ற பயணி காயமடைந்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் சேது (54), வத்தலகுண்டிலிருந்து பெரியகுளத்துக்கு சனிக்கிழமை பேருந்தை ஓட்டிச் சென்றாா்.

டி.வாடிப்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில், பேருந்தில் பயணம் செய்த பெரியகுளம் வேல்நகரைச் சோ்ந்த சுசீந்திரன் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT