தேனி

மதுப் புட்டிகள் விற்பனை செய்தவா் கைது

தேனி மாவட்டம், போடி அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், போடி அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் சந்தேகத்து இடமளிக்கும் வகையில் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பாா்த்திபனை (55) பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது, அவா் விற்பனைக்காக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாா்த்திபனை கைது செய்தனா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT