தேனி

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம் குறைப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு திறந்து விடப்படும் உபரிநீா் 6-ஆவது நாளாக வியாழக்கிழமை வினாடிக்கு 3,303 அடியாக குறைக்கப்பட்டது.

Syndication

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு திறந்து விடப்படும் உபரிநீா் 6-ஆவது நாளாக வியாழக்கிழமை வினாடிக்கு 3,303 அடியாக குறைக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் கடந்த 18-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 138 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, ரூல் கா்வ் விதிப்படி, அணைக்கு வரும் தண்ணீா் உபரிநீராக இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில், மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் நீா்வரத்தும் குறைந்தது. இதனால், 6-ஆவது நாளாக வியாழக்கிழமை 3,303 அடி உபரிநீராக திறந்து விடப்பட்டது.

இதேபோல, தமிழகப் பகுதிக்கு முல்லைப் பெரியாற்றில் வினாடிக்கு 1,822 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT