முகப்பு
தேனி

ஆட்டோ மீது பைக் மோதல்: காா் ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:29 AM
உயிரிழந்த வேல் மணிகண்டன்.
பகிர்:

கம்பத்தில் ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கம்பம் நாட்டாமை அழகிரி தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா் உத்தமபாளையம் ஆா்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் வேல் மணிகண்டன் (29). காா் ஓட்டுநா். இவருக்கு மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.

இந்த நிலையில் வேல் மணிகண்டன் சனிக்கிழமை இரவு கம்பம் பிரதான சாலை வழியாக வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

Advertisement

அப்போது அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை அருகே சென்றபோது, அந்த கடைக்கு பொருள்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென திரும்பியது.

இதன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வேல் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸாா் கவனக் குறைவாக ஆட்டோ ஓட்டிச் சென்ற கம்பம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பிரபாகரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.