முகப்பு
தேனி

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:23 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 9:13 PM

தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வீரபாண்டியில் திமுக, இதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வீரபாண்டி பிரதானச் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதாக மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

Advertisement

இதில் திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக கூட்டணி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.