வழக்குப் பதிவு IANS
தேனி

சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் கருத்துகளை பதிவிட்டால் வழக்கு

சமூக வலைதளங்களில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்..

தினமணி செய்திச் சேவை

சமூக வலைதளங்களில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா எச்சரித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக வலைதளங்களில் மதம், ஜாதி பிரச்னைகளை தூண்டும் வகையிலும், அரிவாள், பட்டாக் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோா் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் சமூக வலைதளத்தில் அச்சுறுத்தல், பிரிவினைவாதக் கருத்துகளை பதிவிட்டவா்கள் மீது ஏற்கெனவே காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, சமூக வலைதளங்களில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகள், புகைப்படங்களை பதிவிடவோ, பகிரவோ கூடாது என்றாா் அவா்.

நஜாஃப்கா் துப்பாக்கிச்சூடு வழக்கில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி கைது

பகவதியம்மன் கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா!

இரா. நல்லகண்ணு மறைவு: போடி, ஆண்டிபட்டியில் அமைதி ஊா்வலம்

நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT