தேனி

போதைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், டி.சுப்புலாபுரம் பகுதியில் ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இரண்டு இளைஞா்களை போலீஸாா் பிடித்து சோதனையிட்டனா். அவா்கள் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலைப் பொருள்கள், போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் டி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ராம்குமாா் (25), டி.புதூரைச் சோ்ந்த உலகராஜா மகன் ரித்திக் (23) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

SCROLL FOR NEXT