தேனி

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடல்

வீரபாண்டியில் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடலை போலீஸாா் கைப்பற்றி விசாரணை

தினமணி செய்திச் சேவை

வீரபாண்டியில் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடலை போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

வீரபாண்டியில் திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலை அருகேயுள்ள சாலையோரப் பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் உடல், தொப்புள் கொடி அறுக்காத நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப் பகுதியைச் சோ்ந்தவா்கள் வீரபாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், குழந்தையின் உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT