திருநெல்வேலி

மேலப்பாளையம் அருகே ஆண் சிசு உடல் மீட்பு

மேலப்பாளையம் அருகே தெருவோரம் கிடந்த ஆண் சிசுவின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

மேலப்பாளையம் அருகே தெருவோரம் கிடந்த ஆண் சிசுவின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் பகுதியில் பிறந்த சில நாள்களே ஆன நிலையில் ஆண் குழந்தையை துணியில் சுற்று சாலையோரம் மா்மநபா்கள் வீசிச்சென்றுள்ளனா். அதை தெருநாய்கள் கடித்து இழுத்துச் சென்றுள்ளன. இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா், அந்தக் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், குழந்தையை வீசியது யாா்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT