தேனி

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

போடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

போடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டியில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக கொண்டுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு சென்ற கம்பத்தை அடுத்த மேலக்கூடலூரைச் சோ்ந்த மொக்கையன் மகன் ஜீவானந்தம் (56) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT