முகப்பு
விருதுநகர்

கல்லூரியில் உலக செவிலியர் தினம்

தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் அறிக்கையின்படி, அடுத்த பத்தாண்டுகளில், மருத்துவத் துறையில் 1 கோடிக்கும் அதிகமான செவிலியர்கள் கூடுதலாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது என

Updated On : 13 மே 2013, 12:17 am IST
பகிர்:

தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் அறிக்கையின்படி, அடுத்த பத்தாண்டுகளில், மருத்துவத் துறையில் 1 கோடிக்கும் அதிகமான செவிலியர்கள் கூடுதலாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது என கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் செவிலியர் கல்லூரியின் நிறுவனத் தலைவர் வி.பி.எம். சங்கர் கூறினார்.

   கல்லூரியில் உலக செவிலியர் தினத்துக்கு தலைமையேற்று பேசுகையில், வி.பி.எம். சங்கர் கூறியதாவது: உலக செவிலியர் நாள், உலக நாடுகளனைத்திலும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

   பொறுமையும், அர்ப்பணிப்பும், பொறுப்பும் செவிலியர் பணிக்குத் தேவையான மிக முக்கியமான பண்புகள். எப்போதும் விழிப்புடனும், பரிவு மற்றும் பிறர் மனம் புண்படாமல் நடந்துகொள்ளும் பாங்கு போன்றவை தேவை என்றார் அவர்.

Advertisement

Advertisement

   விழாவுக்கு கல்லூரித் தாளாளர் பழனிச்செல்வி, துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ். தங்கபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் எம். ஜாஸ்லின் வரவேற்றார்.

ஆசிரியை சுதா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.