முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீஆண்டாள் கோயில் திருஆடிப்பூர பெருவிழாவில் சனிக்கிழமை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீஆண்டாள் கோயில் திருஆடிப்பூர பெருவிழாவில் சனிக்கிழமை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:59 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீஆண்டாள் கோயில் திருஆடிப்பூர பெருவிழாவில் சனிக்கிழமை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருஆடிப்பூர பெருவிழாவில் 5-ம் திருநாளில் ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றும். இதற்காக ஸ்ரீஆண்டாள் சன்னதி முன்பு ஸ்ரீபெரியாழ்வார் எழுந்தருளினார். அங்கு ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீசுந்தரராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் ஆகியோருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் சிங்கம்மாள் குறடு மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர்.

ஐந்து கெருட சேவை:

ஸ்ரீஆண்டாள் பெரிய அன்னவாகனத்திலும், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன் ஆகிய எம்பெருமான்கள் பெரிய திருவடி (கெருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வார் சிறிய அன்னவாகனத்திலும் எழுந்தருளினர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். ஐந்து கெருட சேவையையொட்டி சிறப்பு வான வேடிக்கைகள் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →