முகப்பு
தமிழ்நாடு

பிரதமர் மோடியின் தமிழ்ப் பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்! - இபிஎஸ்

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்ட இபிஎஸ் வலியுறுத்தல்...

தமிழ்நாடு

பிரதமர் மோடியின் தமிழ்ப் பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்! - இபிஎஸ்

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்ட இபிஎஸ் வலியுறுத்தல்...

Updated On : 4 மார்ச், 2026 at 10:12 AM
பகிர்:

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்டிட வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

திமுக மற்றும் கூட்டணி தலைவர்கள் மட்டுமன்றி பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து ஹிந்தியில் உள்ள பெயரை அகற்ற தெற்கு ரயில்வே ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,

"புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். உலக நாடுகளுக்கு செல்லும்போதுகூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது.

இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

summary

Hindi imposition: EPS insists trichy railway office entrance gate should be named in Tamil

முழு கட்டுரையைப் படிக்க →